உலக சுற்றாடல் தினம் 2026 (01.06.2026)
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலகமும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மாகாண அலுவலகம் கிளிநொச்சியும் இணைந்து பிரதேச செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு "மனப்பாங்கு மேம்பாட்டின் மூலம் சூழல் பாதுகாப்புக்கு பங்களித்தல்" எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2026.06.01 அன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை சிரேஸ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் மற்றும் சுற்றாடல் உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.






















