வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 16.06.2026 அன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 16.06.2026 அன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் கௌரவ வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதியமைச்சர் T. B. சரத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக பயனாளிகளிடம் வீட்டினை கையளித்தார். மேலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் ஆகிய அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.































