தேசிய நேர்மை வாரம் – 2026 ஆரம்பநாள் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய நேர்மை வாரம் – 2026 ஆரம்பநாள் நிகழ்வு எமது பிரதேச செயலாளர் திரு.த.முகுந்தன் அவர்களின் தலைமையில் கரைச்சி பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது
“நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டம்” என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய நேர்மை வாரம் – 2026 (2026 ஜூலை 27 முதல் 31 வரை) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக “சட்டத்தை மதிக்கும் நேர்மையான அரச சேவை” எனும் கருப்பொருளை முன்னிறுத்திய ஆரம்பநாள் நிகழ்வு, 2026 ஜூலை 27ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கரைச்சி பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வுகள் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து, “தேசிய நேர்மை சத்தியப்பிரமாணம்” அனைத்து கரைச்சி பிரதேச செயலக  அலுவலர்களாலும் வாசிக்கப்பட்டு, நேர்மையான மற்றும் பொறுப்புணர்வுள்ள அரச சேவையை வழங்கும் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், மேற்பார்வை ஒன்று இல்லாத நேரத்திலும் சிறந்த கண்ணியமிக்க அரச சேவையை வழங்குதலை  வலியுறுத்தி உதவி பிரதேச செயலாளர் நிகழ்வின் சிறப்புரை நிகழ்த்தினார்.


இத்தகைய நிகழ்வுகள், நேர்மைக் கலாசாரத்தை அரச சேவையில் மேலும் வலுப்படுத்துவதோடு, மக்களின் நம்பிக்கையைப் பேணும் பொறுப்புணர்வுமிக்க, சட்டத்தை மதிக்கும் மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவையை உருவாக்குவதற்கான முக்கியமான முன்னெடுப்பாக அமைகின்றன.

WhatsApp Image 2026 07 27 at 09.43.52

WhatsApp Image 2026 07 27 at 09.43.51

WhatsApp Image 2026 07 27 at 09.43.55

WhatsApp Image 2026 07 27 at 09.44.35

WhatsApp Image 2026 07 27 at 09.44.36

WhatsApp Image 2026 07 27 at 09.44.38 1

WhatsApp Image 2026 07 27 at 09.44.39

WhatsApp Image 2026 07 27 at 09.44.42

WhatsApp Image 2026 07 27 at 09.44.40

WhatsApp Image 2026 07 27 at 09.44.44

WhatsApp Image 2026 07 27 at 09.44.44 1

WhatsApp Image 2026 07 27 at 09.44.46

Scroll To Top